மானானது நீரோடையை

 

 

மானானது நீரோடையை வாஞ்சித்து கதறும் போல்

என் தேவனே என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே

 

வாஞ்சையோடு உம்மை ஆராதிப்பேன்

முழுஉள்ளத்தோடு நான் தொழுதிடுவேன்

தாகத்தோடு நித்தம் ஆராதிப்பேன்

சாஷ்டங்கமாய் உம்மை பணிந்திடுவேன்     - மானானது

 

1. ஆராதனை செய்ய மீட்டெடுத்தீர்

சீனாய் மலையண்டை நடத்தி வந்தீர்

இஸ்ரவேல் போல் என்னை இரட்சித்தீரே

என்றுமே உம்மைநான் ஆராதிப்பேன்              - வாஞ்சையோடு

 

2. கேருபீன்கள் சேராபீன்களாலே

ஓயாமல் போற்றப்படுபவரே

பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன்

பணிந்து உம்பாதம் நான் தொழுதிடுவேன்       - வாஞ்சையோடு

 

3. மகிமைக்கும் கனத்திற்;கும் வல்லமைக்கும்

பாத்திரரே உம்மை ஆராதிப்பேன்

இருந்தவர் இருப்பவர் வருபவரே

இயேசுராஜா உம்மை தொழுதிடுவேன்                 - வாஞ்சையோடு